12 வருடங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய கிரிக்கெட் அணி

இந்தியா கடைசியாக 2012-ம் ஆண்டு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது.

Update: 2024-10-26 11:23 GMT

புனே,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே புனேயில் கடந்த 24-ம் தேதி தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டி 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது. இதில் 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்த தோல்வியின் மூலம் 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் தோல்வியே சந்திக்காமல் வெற்றி நடை போட்டு வந்த இந்திய அணியின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. கடைசியாக 2012-ல் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா இழந்திருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்