நேபாளம்: இந்தியர்களுடன் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 14 பேர் உயிரிழப்பு

நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் உள்ள மர்ஸ்யாங்டி என்ற ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Update: 2024-08-23 07:48 GMT

காத்மாண்டு,

நேபாளத்தில் பொக்காராவில் இருந்து காத்மாண்டு நோக்கி 40 பேர் இந்தியர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். தனாஹூன் மாவட்டத்தில் உள்ள மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகேயுள்ள சாலையில் சென்றபோது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பயணிகள் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், மீட்புப்பணிகளை உள்ளூர் மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.

நீச்சல் வீரர்கள் உதவியுடன் ஆற்றில் விழுந்த 16 பேர் மீட்கப்பட்டனர். 14 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. உயிரிழந்தவர்கள் அனைவரும் இந்தியர்களா? என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்