லைவ் அப்டேட்ஸ்: சென்னைக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் - மழை படிப்படியாக அதிகரிக்கும்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Update: 2024-10-15 01:49 GMT


Live Updates
2024-10-15 09:17 GMT

மழை தண்ணீர் தேங்கியதால் 5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன

சென்னையில் பெய்து வரும் மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நகரில் மொத்தம் 21 சுரங்கப்பாதைகள் உள்ளன. அதில் பெரம்பூர், வியாசர்பாடி கணேசபுரம், தி.நகர் துரைசாமி, மேட்லி ரோடு, சுந்தரம் பாயிண்ட் ஆகிய 5 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் அதிக அளவு தேங்கி நிற்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.

2024-10-15 08:56 GMT

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்”

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு

ஆரஞ்சு அலர்ட்

வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை

மஞ்சள் அலர்ட்

திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை

2024-10-15 08:51 GMT

சென்னைக்கு இன்றும் ரெட் அலர்ட்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (அக்டோபர் 16) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்றும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2024-10-15 07:58 GMT

ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து நெரிசல்

தொடர் கனமழை காரணமாக ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணித்து நிற்கின்றன. எஸ்.ஆர்.பி. டூல்ஸ் முதல் கந்தன்சாவடி வரை வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். 

2024-10-15 07:55 GMT

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் வடபழனி 100 அடி சாலையில் மழை நீர் தேங்கி நிற்கும் காட்சி

 

2024-10-15 07:47 GMT

முன்களப்பணியாளர்களுடன் தேநீர் அருந்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் புளியந்தோப்பு பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெருநகர சென்னை மாநகராட்சி முன்களப்பணியாளர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். பின்னர், அருகில் இருந்த தேநீர் கடைக்கு அவர்களை அழைத்து சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்தினார். 



 


2024-10-15 07:34 GMT

அண்ணாநகர் சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்



 




 


2024-10-15 07:20 GMT

வடகிழக்கு பருவமழையால் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ராயபுரம் மண்டலம் வார்டு 56 பிரகாசம் சாலை பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் டிராக்டர் மூலம் அகற்றும் காட்சி



 


2024-10-15 07:17 GMT

வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே மழை நீர் தேங்கி நிற்கும் காட்சி.


   

Tags:    

மேலும் செய்திகள்