இரவு 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இரவு 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-07 15:54 GMT

கோப்புப்படம்

சென்னை,

கேரளா மற்றும் தென்தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கோவை, திருவண்ணாமலை, தருமபுரி, நீலகிரி, திருப்பூர், தென்காசி, குமரி, திருச்சி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்