பள்ளிபாளையத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட கலெக்டர் உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம் பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-22 02:52 GMT

கோப்புப்படம்

பள்ளிபாளையம்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ந்தேதி தொடங்கியது. தற்போது, உள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தின் அனேக இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த சூழலில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கர்நாடக மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கனமழை பெய்து வருவதால் பள்ளிபாளையத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்.22) விடுமுறை அளிக்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்