இரண்டு நாட்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள்?

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகளை இரண்டு நாட்களில் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-10-28 05:20 GMT

சென்னை,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 9-ம் தேதி நடத்தியது.

இதில் பங்கேற்க 20 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 7 ஆயிரத்து 247 மையங்களில் 15 லட்சத்து 80 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதனிடையே, பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த கோரிக்கைகளின் அடிப்படையில், கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு காலியிடங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 724 ஆக உயர்த்தப்பட்டது. இரண்டாவது கட்டமாக 2 ஆயிரத்து 208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு, 8 ஆயிரத்து 932 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்நிலையில், இன்னும் 2 நாட்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. தேர்வு முடிந்த 3 மாதத்தில் முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்