சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் முன்னிலை

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் முன்னிலையில் உள்ளார்.

Update: 2024-06-04 03:55 GMT

நெல்லை,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் களமிறங்கியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 4,297 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 4,286 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்