இன்ஸ்டாகிராம் பழக்கம்... அடிக்கடி தனிமையில் உல்லாசம்... 3 மாத கர்ப்பிணியான கல்லூரி மாணவி

கல்லூரி மாணவிக்கு புதுக்கோட்டையை சேர்ந்த வாலிபருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது.

Update: 2024-07-03 05:10 GMT

ஈரோடு,

ஈரோடு அருகே உள்ள லக்காபுரம் பகுதியில் வசித்துவரும் வியாபாரி ஒருவரின் மகளுக்கு 21 வயதாகிறது. இவர் ஈரோடு பகுதியில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கல்லூரி மாணவிக்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த முகமது ஹர்ஷத் (வயது 23) என்கிற வாலிபருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது.

நாட்கள் செல்ல செல்ல இருவரும் தங்களுடைய செல்போன் எண்களை பரிமாறி நேரம் செல்வதே தெரியாமல் உரையாடி வந்தனர். ஒரு கட்டத்தில் அது காதலாய் மலர்ந்தது. இதையடுத்து நேரில் சந்திக்க இருவரும் முடிவு செய்தனர். அதன்படி புதுக்கோட்டையில் இருந்து முகமது ஹர்ஷத் பெருந்துறைக்கு வந்து காதலியை சந்தித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து அடிக்கடி காதலர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. அதன்விளைவாக மாணவி 3 மாத கர்ப்பமானார். அதன்பின்னர்தான் மாணவிக்கு பயம் ஏற்பட்டுள்ளது. தயங்கி தயங்கி பெற்றோரிடம் நடந்த விவரங்களை கூறியுள்ளார்.

அதைக்கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர் உடனே புதுக்கோட்டைக்கு சென்று முகமது ஹர்ஷத்தையும், அவருடைய பெற்றோரையும் சந்தித்து முறையிட்டுள்ளனர். அப்போது முகமது ஹர்ஷத்தின் பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று உறுதி கூறியுள்ளனர். இதனால் மாணவியின் பெற்றோர் நம்பிக்கையுடன் வீடு திரும்பினார்கள்.

ஆனால் சொன்னபடி அவர்கள் திருமணத்துக்கு எந்த ஏற்பாடும் செய்யாமல் நாட்களை தட்டிக்கழித்து வந்துள்ளனர். இதையடுத்து மாணவியின் பெற்றோர் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வராணி, சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் முகமது ஹர்ஷத் மற்றும் அவருடைய தந்தை வக்கீம் சல்மான், தாய் பீவிஜான், சித்தப்பா கபூர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த புதுக்கோட்டைக்கு சென்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்