சிதம்பரம்: கார், லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் பலி

சிதம்பரத்தில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-09-12 00:29 GMT

சிதம்பரம்,

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முகமது அன்வர் (வயது 56). இவரது உறவினர் ஒருவர் உடல்நலக்குறைவால் துபாயில் இருந்து அழைத்து வரப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரை பார்ப்பதற்காக தனது உறவினர்களுடன் ஒரு காரில் சென்றார்.

பின்னர் சென்னையில் சிகிச்சை பெற்று வருபவரை பார்த்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார். இவர்கள் வந்த காரை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூரை சேர்ந்த யாசர் அராபத் (வயது 40) என்பவர் ஒட்டி வந்தார்.

காரில் நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்த ஹாஜிரா பேகம் (வயது 62), திருமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஹராபத் நிஷா (வயது 30) அவரது குழந்தை அப்னான் (வயது 3) ஆகியோர் பயணம் செய்தனர். காரை யாசர் அராபத் ஒட்டி வந்தார்.

இந்த கார் இன்று அதிகாலை சிதம்பரம் அருகே உள்ள பு.முட்லூர் மேம்பாலத்தின் அருகே வந்தது. அப்போது எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. இதில் இடுபாடுகளில் சிக்கிய 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிப்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த உடன் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்