ஏற்றத்துடன் நிறைவடைந்த சென்செக்ஸ் - இன்றைய பங்குச்சந்தை நிலவரம்
இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது.;

மும்பை,
இந்திய பங்குச்சந்தையில் இன்று சென்செக்ஸ் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. அதன்படி, 10 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 23 ஆயிரத்து 668 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 32 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 78 ஆயிரத்து 17 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 28 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 25 ஆயிரத்து 86 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேவேளை, 97 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 607 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
118 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 11 ஆயிரத்து 581 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 64 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 59 ஆயிரத்து 580 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.