மராட்டிய சட்டசபை தேர்தல்: அஜித் பவார் வேட்புமனு தாக்கல்

மராட்டிய மாநிலத்தின் பாராமதி சட்டசபை தொகுதியில் அஜித பவார் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Update: 2024-10-28 07:32 GMT

மும்பை,

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 20-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலில் ஆளும், எதிர்க்கட்சி கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கூட்டணியில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும், எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

பாஜக, சிவசேனா கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், 38 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கடந்த 23ம் தேதி வெளியிட்டது. அதில் பவார் குடும்பத்தின் கோட்டையான பாராமதி சட்டசபை தொகுதியில் அஜித் பவார் மீண்டும் களம் காண்கிறார். அவரை எதிர்த்து அஜித் பவாரின் அண்ணன் மகன் யுகேந்திர பவார் போட்டியிடுகிறார்.

நாளை வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் என்பதால் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், மராட்டிய துணை முதல்-மந்திரியும், என்சிபி தலைவருமான அஜித் பவார், பாராமதி சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்