நானியின் 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தில் இணைந்த அருவி பட நடிகை

நானியின் 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தில் அருவி பட நடிகை இணைந்துள்ளார்.

Update: 2024-07-27 16:23 GMT

தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நானி. இவர் அடுத்தடுத்து புதுப்புது கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இவரது முந்தைய படங்களான 'ஷியாம் சிங்கா ராய்', 'அடடே சுந்தரா' திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது. நானியின் 30-வது படமாக 'ஹாய் நான்னா' படம் கடந்தாண்டு இறுதியில் வெளியானது. இதில் நானியுடன் மிருணாள் தாக்குர் நடித்திருந்தார். 31வது படமாக அடடே சுந்தரா படத்தின் இயக்குநருடன் நானி இணைந்துள்ளார்.

டி.டி.வி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு தெலுங்கில் 'சரிபோத சனிவாரம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு தமிழில் 'சூர்யாவின் சனிக்கிழமை' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இத்திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி வெளியாகவுள்ளது.

'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தில் நடிகை அதிதி பாலன் தற்போது இணைந்துள்ளார். அருவி படத்தில் நடித்து கவனம் பெற்ற நாயகி அதிதி பாலன். இவர் மலையாளத்தில் நிவின் பாலியுடன் நடித்துள்ளார். தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்