5 நாட்களாக பாறைகள்மேல் தஞ்சமடைந்துள்ள 3 பேரை... ... வயநாடு நிலச்சரிவு: மாயமான 25 தமிழர்களின் நிலை என்ன?

5 நாட்களாக பாறைகள்மேல் தஞ்சமடைந்துள்ள 3 பேரை மீட்கும் பணி தீவிரம்

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட முண்டக்கையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் வெள்ளரிமலை பகுதியில் சூஜிப்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. வயநாடு நிலச்சரிவில் சிக்கி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேர் சூஜிப்பாறையில் நீர்வீழ்ச்சியில் உள்ள பாறைகள் மேல் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த 5 நாட்களாக தண்ணீரை மட்டும் குடித்து 3 பேரும் உயிர் வாழ்ந்துள்ளனர். தற்போது மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பாறைகளின் மேல் தஞ்சமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேரையும் மீட்புக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

பாறைகளில் சிக்கியுள்ள 3 பேரையும் மீட்பதற்கான வாய்ப்புகள் குறித்து இந்திய ராணுவத்தினர் திட்டமிட்டு வருகின்றனர். 3 பேரும் விரைவில் மீட்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-08-03 11:13 GMT

Linked news