ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க... ... ஜம்மு-காஷ்மீர் 2ம் கட்ட தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு

ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் - தலைமை தேர்தல் ஆணையர்

ஜம்மு-காஷ்மீரில் 2ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இது வரலாற்றை உருவாக்கி வருகிறது. ஒட்டுமொத்த பள்ளத்தாக்கு மற்றும் ஜம்மு பகுதிகளில் ஆர்வமுடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஸ்ரீநகர் பள்ளத்தாக்கு பகுதியாக இருந்தாலும், இடையூறுகள் வரும் மலை உச்சிப்பகுதியாக இருந்தாலும் எல்லா பகுதிகளும் மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முந்தைய காலங்களில் தேர்தலை புறக்கணிக்க அழைப்புகள் வரும் பகுதிகளிலும் தற்போது மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரில் அமைதியாகவும், ஆர்வமாகவும் தேர்தல் நடைபெறுவதை இது உலகிற்கு காட்டுகிறது. ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலை வெளிநாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகளும் நேரில் பார்த்துள்ளனர்’ என்றார்.

Update: 2024-09-25 07:43 GMT

Linked news