தவெக மாநாடு - குடிநீரின்றி தொண்டர்கள் அவதி

தவெக மாநாட்டுக்கு அதிகாலை முதலே தொண்டர்கள் குவிந்து வரும் சூழலில் குடிநீர் கிடைக்காமல் தொண்டர்கள் அவதி அடைந்துள்ளனர். குடிநீரின்றி மயக்கமடைந்த நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாநாட்டு உள்பகுதியில் திரள்வதால் கட்டுப்படுத்த முடியாமல் பவுன்சர்கள் திணறி வருகின்றனர். மாநாட்டு திடலில் இரு புறங்களிலும் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் அமைதி காக்கும்படி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2024-10-27 05:43 GMT

Linked news