வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்புவாக்கு... ... மத்தியில் அமைகிறது பா.ஜ.க. கூட்டணி ஆட்சி

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு


வாக்கு எண்ணிக்கைக்காக தமிழ்நாடு முழுவதும் 15 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் 1 லட்சம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருபவர்கள் அனைவரும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர். அவர்கள் செல்போன் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் பணிக்காக வரும் அலுவலர்கள் இன்று காலை 6 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்து, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டசபை தொகுதிக்கான கட்டிடத்தில், அடையாள அட்டையுடன் ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் முடிவுகளை தேர்தல் கமிஷனின் அதிகாரபூர்வ இணையதளமான https://results.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Update: 2024-06-03 22:38 GMT

Linked news