தமிழகத்தில் ஒரே நாளில் நடந்த 4 கொலை சம்பவங்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-03-2025
தமிழகத்தில் ஒரே நாளில் நடந்த 4 கொலை சம்பவங்கள் தொடர்பாக அ.தி.மு.க. கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதுபற்றி தமிழக எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி பேசும்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக செல்கிறது.
சட்டத்தின் முன் யாரும் தப்ப முடியாது என முதல்வர் நேற்று கூறிய நிலையில் நான்கு கொலைகள் நடந்துள்ளன. முக்கிய பிரச்சினைகளை தான் கவன ஈர்ப்பாக கொண்டு வருகிறோம் என கூறினார்.
Update: 2025-03-20 06:51 GMT