பா.ஜ.க.வின் முழு அடைப்பு போராட்டத்திற்கு அரசு எதிர்ப்பு

மேற்கு வங்காளத்தில் நாளை 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என எதிர்க்கட்சியான பா.ஜ.க. அறிவித்ததற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முழு அடைப்பு எதுவும் கிடையாது என்றும், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் என்றும் முதல்-மந்திரியின் தலைமை ஆலோசகர் அலபன் பந்தோபாத்யா தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்துகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் நாளை வழக்கம் போல் வாகனங்களை இயக்கவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என்று உறுதியளித்தார்.

Update: 2024-08-27 12:30 GMT

Linked news