மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக பா.ஜ.க. போராட்டம்

கொல்கத்தா மாநகர துணை கமிஷனர் (மத்திய மண்டலம்) இந்திரா முகர்ஜியை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி பா.ஜ.க. இளைஞரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்சியின் தலைவர் தபஸ் ராய் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் துணை கமிஷனர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பா.ஜ.க.வின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக, எஸ்.என்.பானர்ஜி சாலையில் உள்ள இந்திரா முகர்ஜியின் அலுவலகத்திற்கு வெளியே போலீசார் தடுப்புகளை வைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.க.வினர் முழக்கமிட்டனர். சிலர் தடுப்பு வேலிகளில் ஏறி நின்று காவல்துறைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

‘திரிணாமுல் காங்கிரசின் சேவகர்களாக போலீசார் மாறிவிட்டனர். துணை கமிஷனர் இந்திரா முகர்ஜி மற்றும் கமிஷனர் இருவரும் இந்த வழக்கில் மெத்தனமாக இருக்கிறார்கள். அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்’ என தபஸ் ராய் தெரிவித்தார்.

Update: 2024-09-12 10:43 GMT

Linked news