கருணாநிதி ஒரு மாநில தலைவர் மட்டுமல்லாமல் தேசம்... ... கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டார்

கருணாநிதி ஒரு மாநில தலைவர் மட்டுமல்லாமல் தேசம் முழுவதும் போற்றப்படுபவராக திகழ்ந்தார் - ராஜ்நாத் சிங்

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், “மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி ஒரு மாநில தலைவர் மட்டுமல்லாமல் தேசம் முழுவதும் போற்றப்படுபவராக திகழ்ந்தார்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் ஜனநாயக கூறுகள், இந்திய ஜனநாயகத்தின் செயல்பாடுகளில் மிகப்பெரிய தாக்கம் அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் மத்திய அரசு அமைக்கப்பட்டிருந்த பொழுது மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் ஆதரவு மிகவும் பக்கபலமாக இருந்தது” என்று அவர் கூறினார்.

Update: 2024-08-18 14:41 GMT

Linked news