காசா நகரை விட்டு வெளியேற மறுப்பவர்கள்... ... 15வது நாளாக தொடரும் போர்: எகிப்தில் இருந்து நிவாரண உதவி பொருட்களுடன் காசாவுக்குள் நுழைந்த லாரிகள்...!

காசா நகரை விட்டு வெளியேற மறுப்பவர்கள் பயங்கரவாதிகளாக கருத்தப்படுவர் - இஸ்ரேல் அதிரடி

காசாமுனை மீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதனிடையே, வடக்கு காசா மற்றும் காசா நகரில் உள்ள பொதுமக்கள் உடனடியாக காசாவின் தெற்கு பகுதிக்கு செல்லும்படி இஸ்ரேல் கடந்த சில நாட்களாக எச்சரித்து வருகிறது.

இந்நிலையில், காசா நகரில் இருப்பவர்கள் அல்லது காசா நகருக்கு திரும்பி வருபவர்கள் பயங்கரவாதிகளாக கருத்தப்படுவர் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களின் செல்போனுக்கு வரும் அழைப்பில் இஸ்ரேல் ராணுவம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. மேலும், காசா நகரை விட்டு வெளியேறாமல் இருப்பவர்கள் பயங்கரவாதிகளின் கூட்டாளிகளாக கருத்தப்படுவர். காசா நகரில் இருப்பவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடம் என இஸ்ரேல் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

Update: 2023-10-21 15:14 GMT

Linked news