ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்களிக்க காத்திருக்கும் அனைவருக்கும் இரவு உணவு வழங்க தேர்தல் பார்வையாளர் உத்தரவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் டோக்கன் விநியோகிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்துவரும் 138வது வாக்குச்சாவடியில், வாக்களிக்க மக்கள் காத்து இருக்கின்றனர். பெரும்பாலும் கூலித்தொழிலாளர்கள் என்பதால், பணி முடிந்த பின்னர் இவர்கள் வாக்களிக்க வந்தனர். அனைவருக்கும் இரவு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

6 மணிக்கு பிறகு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்து வரும் ராஜாஜிபுரம் வாக்குச் சாவடியில் தேர்தல் பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-02-27 15:13 GMT

Linked news