ஜெயலலிதாவின் செயல்வடிவம் எடப்பாடி பழனிசாமி-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

இன்று அ.தி.மு.க .அம்மா பேரவையினர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு அளித்தனர். அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் செயல்வடிவம் எடப்பாடி பழனிசாமி. ஓ.பன்னீர் செல்வம் மனமுவந்து எடப்பாடி பழனிசாமியை ஒற்றை தலைமையாக அறிவிக்க வேண்டும்.பரிந்துரை,நிர்வாகிகள் நியமனத்தில் ஓ.பன்னீர் செல்வம் பாராபட்சமாக செயல்பட்டார். அ.தி.மு.க.வில் அவர் வகித்த பதவிகளை யாரும் வகித்ததில்லை. அவர் நடவடிக்கை சரியில்லை என்பதால் தான் நாங்கள் எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்கிறோம் என கூறினார். 

Update: 2022-06-21 05:39 GMT

Linked news