சிக்கிமில் அபார வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்த... ... அருணாசலபிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்த பா.ஜ.க. - சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா அபார வெற்றி

சிக்கிமில் அபார வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்த சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா

சிக்கிமில் மொத்தமுள்ள 32 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. சிக்கிமில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, பா.ஜ.க., சிக்கிம் ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. பெரும்பான்மைக்கு 17 தேவை என்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. இறுதியில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 31 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி 1 தொகுதியை கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம் 31 தொகுதிகளில் அபார வெற்றிபெற்ற சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி சிக்கிமில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. ஆட்சியை தக்கவைத்ததன் மூலம் பிரேம் சிங் தமாங் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார். சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா அபார வெற்றிபெற்றதை அக்கட்சியினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

Update: 2024-06-02 04:08 GMT

Linked news