இலங்கை அதிபர் தேர்தல்: முன்னிலை நிலவரம் தற்போதைய... ... இலங்கை அதிபராகிறார் அனுரா குமார திசநாயகே

இலங்கை அதிபர் தேர்தல்: முன்னிலை நிலவரம்

தற்போதைய நிலையில் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுரா குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

வாக்குகள் எண்ணப்பட்டுவரும்நிலையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்தபோதும் சுயேட்சையாக ரணில் விக்கிரசிங்கே களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரம்

ரணில் விக்கிரமசிங்கே (சுயேச்சை) - 1,97,078 வாக்குகள் (18.37 சதவீதம்)

அனுரா குமார திசநாயகே (தே.ம.ச.) - 5,65,664 வாக்குகள் ( 52.71 சதவீதம்)

நமல் ராஜபக்சே (இ.பொ.ப.) - 24,050 வாக்குகள் ( 2.24 சதவீதம்)

சஜித் பிரேமதாசா (ஐ.ம.ச.) - 2,36,655 வாக்குகள் ( 22.05 சதவீதம்)

அரியநேந்திரன் (தமிழ் வேட்பாளர்) - 24,781 வாக்குகள் ( 2.31 சதவீதம்)

திலகர் (தமிழ் வேட்பாளர்) - 146 வாக்குகள் ( 0.01 சதவீதம்)

தபால் வாக்குகள்

தபால் வாக்குகள் எண்ணப்பட்ட 8 மாவட்டங்களில் அனுரா குமார திசநாயகே முன்னிலையில் இருந்து வருகிறார்.

கொழுப்பு, வன்னி, கல்லே உள்ளிட்ட மாவட்டங்களில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் அனுரா குமார திசநாயகே முன்னிலையில் உள்ளார். 

Update: 2024-09-22 01:35 GMT

Linked news