சுட்டெரிக்கும் வெயில் - குடையாக மாறிய நாற்காலி

தவெக மாநாட்டு திடலில் சேர்களை தலையில் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் தொண்டர்கள் சுற்றி வருகின்றனர். மாநாட்டு திடலில் போடப்பட்டிருந்த 50,000 இருக்கைகளும் நிரம்பின. மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கும் நிலையில், தற்போதே நிரம்பி வழிகிறது. வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தலையில் சேர்களை தூக்கி நிற்கும் தொண்டர்களை பார்க்க பரிதாபமாக இருந்தது. 

Update: 2024-10-27 06:34 GMT

Linked news