ஒருங்கிணைப்பு குழு மீது விஜய் காட்டம்

மாநாட்டு திடலில் கடும் வெயிலால், சேர்களை குடையாக பிடித்தப்படி தலையில் தூக்கி வைத்து தரையில் தொண்டர்கள் அமர்ந்திருந்தனர். நீர்சத்து குறைபாட்டால் பெண்கள் பலர் மயக்கம் அடைந்த நிலையில் விஜய் நிர்வாகிகளை அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது. மாநாட்டிற்கு சரியாக தண்ணீர் விநியோகம் செய்ய முடியவில்லையா? சரியாக திட்டமிடவில்லையா? ஏன் இந்த சொதப்பல்? என நிகழ்ச்சி ஒருங்கிணைபாளரிடம் விஜய் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விஜய் நடந்து வருவதற்காக அமைக்கப்பட்டுள்ள பாதையில் இருந்து தண்ணீர் பாட்டில்களை தொண்டர்கள் நோக்கி வீசிய நிர்வாகிகளை விஜய் கண்டித்தாக கூறப்படுகிறது.

Update: 2024-10-27 06:28 GMT

Linked news