மாணவர் ஆர்வலர்கள் 4 பேர் அதிரடி கைது

தலைமைச் செயலகம் நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி தொடங்குவதற்கு முன்னதாக மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த முக்கியமான 4 மாணவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை கைது செய்துள்ளது.

மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த சுவோஜித் கோஷ், புலேகேஷ் பண்டிட், கவுதம் சேனாபதி மற்றும் பிரீத்தம் சர்க்கார் ஆகியோர் நேற்று நள்ளிரவில் திடீரென காணாமல் போனதாக எதிர்க்கட்சி தலைவர் சுவெந்து அதிகாரி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

“மாணவர் ஆர்வலர்கள் 4 பேரும் ஹவுரா ரெயில் நிலையத்தில் தன்னார்வலர்களுக்கு உணவு விநியோகம் செய்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் மம்தாவின் காவல்துறைதான் பொறுப்பு. இந்த கைது நடவடிக்கை தொடர்பாக அவர்களின் குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகி உள்ளனர்‘ என்றும் சுவேந்து அதிகாரி கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள காவல்துறை, “யாரும் காணாமல் போகவில்லை. 4 பேரும் இன்று தலைமைச் செயலகம் நோக்கி நடைபெறும் பேரணியின்போது பெரிய அளவிலான வன்முறையில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். மேலும் கொலை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, பொது பாதுகாப்பு கருதி அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்” என கூறி உள்ளது. கைது செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறி உள்ளது.

Update: 2024-08-27 08:20 GMT

Linked news