ஜி20 மாநாட்டில் பங்கேற்க பாரத் மண்டபத்திற்கு வருகை தரும் உலக நாடுகளின் தலைவர்களை வரவேற்றார் பிரதமர் மோடி...!

ஜி20 மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் வருகை தர தொடங்கியுள்ளனர்.

ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்திற்கு சர்வதேச நாணய நிதிய தலைவி கிறிஸ்டலினா ஜார்ஜிவா, ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், உலக வங்கி தலைவர் அஜய் பங்கா உள்ளிட்ட தலைவர்கள் வருகை தந்துள்ளனர். மாநாட்டில் பங்கேற்க வரும் உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்று வருகிறார். 



Update: 2023-09-09 04:16 GMT

Linked news