ஹமாஸ் போன்ற பயங்கரவாதிகளை வெற்றி பெற விட மாட்டோம்: ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது, இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் குறித்தும் பேசினார். ஜோ பைடன் கூறுகையில்,  உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை எப்படி ஏற்க முடியாதோ அதேபோல இஸ்ரேல் மீதான தாக்குதலையும் ஏற்க முடியாது.

ஹமாஸ் போன்ற பயங்கரவாதிகள் வெற்றி அடைய விட மாட்டோம். ரஷ்ய அதிபர் புதின் போன்ற கொடுங்கோலர்கள் வெல்லவும் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் இருவருமே அண்டை நாடுகளின் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார்கள். இஸ்ரேல் மற்றும் உக்ரைனுக்கு ஒதுக்கப்படும் நிதி அளவு இந்த ஆண்டில் இருந்து அதிகரிக்கப்படும். என்று கூறினார். 

Update: 2023-10-20 01:44 GMT

Linked news