விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 5 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு தாமதம்

Update: 2024-07-10 02:20 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்தநிலையில், கருங்காலிபட்டு வாக்குச்சாவடி எண் 74, கல்பட்டு வாக்குச்சாவடி எண் 78, மாம்பழப்பட்டு வாக்குச்சாவடி எண் 66 ,ஒட்டம் காடுவெட்டி வாக்குச்சாவடி எண் 68 உள்பட சாவடிகளில் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. பின்னர் சரிசெய்யப்பட்டது. 5 வாக்குச்சாவடிகளில் 30 நிமிடங்கள் வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்