வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் சுரேஷ் இணை

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

Update: 2024-08-21 11:24 GMT

Image Courtesy: @WSOpen

வின்ஸ்டன் சலேம்,

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் தட்சிணேஸ்வர் சுரேஷ் - பிரிட்டனின் லூகா பவ் இணை, உருகுவேயின் ஏரியல் பெஹா - அர்ஜெண்டினாவின் ஆண்ட்ரேஸ் மோல்டெனி இணையுடன் மோதியது.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் சுரேஷ் இணையும், 2வது செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் ஏரியல் பெஹா இணையும் கைப்பற்றியது.

இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட சுரேஷ் இணை 10-8 என்ற புள்ளிக்கணக்கில் ஏரியல் பெஹா இணையை வீழ்த்தியது. இதன் மூலம் சுரேஷ் இணை 6-4, 5-7, 10-8 என்ற செட் கணக்கில் ஏரியல் பெஹா இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. 

Tags:    

மேலும் செய்திகள்