அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவராக கல்யாண் சவுபே தேர்வு

அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவராக கல்யாண் சவுபே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-09-02 11:08 GMT

image courtesy: Indian Football Team twitter

புதுடெல்லி,

இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு முன்னாள் கால்பந்து வீரர்கள் பாய்ச்சுங் பூட்டியா, கல்யாண் சவுபே போட்டியிட்டனர். 34 மாநில கால்பந்து சங்கத்தை சேர்ந்தவர்கள், ஓட்டுப்போட்டு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.

மேற்கு வங்காள மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான 45 வயதான கல்யாண் சவுபே மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால் அணிக்காக விளையாடி இருக்கிறார். முன்னாள் கேப்டனான பாய்ச்சுங் பூட்டியா இந்திய அணிக்காக 104 போட்டிகளில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக கல்யாண் சவுபே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கல்யாண் சவுபே 33-1 என்ற வாக்கு வித்தியாசத்தில் பாய்ச்சுங் பூட்டியாவை தோற்கடித்துள்ளார். 85 ஆண்டு கால இந்திய கால்பந்து வரலாற்றில் ஒரு வீரர் தலைவர் பதவியை வகிக்கப்போவது இதுவே முதல்முறையாகும்.

துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் கர்நாடக கால்பந்து சங்கத் தலைவர் என்.ஏ. ஹரீஸ் வெற்றி பெற்றார். பொருளாளர் பதவிக்கான தேர்தலில் அருணாச்சல பிரதேசத்தின் கிபா அஜய் வெற்றி பெற்றார். அதே சமயம் 14 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த 14 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்