டிஎன்பிஎல்: பிரதோஷ் ரஞ்சன் அதிரடி..! சேப்பாக் அணி 217 ரன்கள் குவிப்பு

சேப்பாக் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது.

Update: 2023-06-13 15:35 GMT

கோவை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியுள்ளது. கோவையில் இன்று நடைபெறும் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி சேப்பாக் அணி வீரர்கள் அதிரடியாக ரன்கள் குவித்தனர். இதனால் சேப்பாக் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக சேப்பாக் அணியின் தொடக்க வீரர்கள் பிரதோஷ் ரஞ்சன் 88 ரன்களும் , ஜெகதீசன் 35ரன்கள் ,எடுத்தனர் . பாபா அபராஜித் 29 ரன்களும் , சஞ்சய் யாதவ் 31 ரன்களும் எடுத்தனர்.

இதனை தொடர்ந்து சேலம் அணி 218 ரன்கள் இலக்குடன் விளையாடுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்