மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு; சின்னியம்பாளையத்தில் நாளை மறுநாள் நடக்கிறது

மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு சின்னியம்பாளையத்தில் நாளை மறுநாள் நடக்கிறது.

Update: 2022-07-14 21:35 GMT

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளில் பங்குகொள்ள ஈரோடு மாவட்ட அணிக்கு 16 வயது மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது. 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான தேர்வு வருகிற 17-ந்தேதி (நாளை மறுநாள்) காலை 7 மணிக்கும், 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேர்வு பிற்பகல் 3 மணிக்கும், சின்னியம்பாளையத்தில் உள்ள கே.சி.எஸ். கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் பிறப்பு சான்றிதழ், வெள்ளை சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களுடன் கலந்து கொள்ளுமாறு சங்க செயலாளர் ஜாபர் ஆசிக் அலி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்