வில்லன் அல்ல.. காக்கும் தெய்வம்: உத்தரகாண்ட் மாநிலத்தில் துரியோதனன் கோவில்

மகாபாரத யுத்தத்தில் துரியோதனன் இறந்தபோது, அவனுக்காக இப்பகுதி மக்கள் கண்ணீர் விட்டு அழுததாக புராணங்கள் கூறுகின்றன.

Update: 2024-07-16 09:00 GMT

உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ளது ஜகோல் என்ற கிராமம். இங்கு மகாபாரத இதிகாசத்தில் சொல்லப்பட்டுள்ள, கவுரவர்களின் வரிசையில் முதன்மையானவனான துரியோதனனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கவுரவர்களைத் தங்கள் மூதாதையர்களாகக் கொண்டவர்கள் என்றும், அவர்கள்தான் இந்த ஆலயத்தை துரியோதனனுக்காக கட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

புராண கதை

ஒரு முறை துரியோதனன் இந்தப் பகுதியைத் தாண்டிச் சென்றபோது, இதன் இயற்கை அழகில் மயங்கினான். அங்குள்ள உள்ளூர் தெய்வமான மஹசுவிடம், இமயமலையை ஒட்டி தனக்கென ஒரு பள்ளத்தாக்கு வேண்டும் என்று வேண்டினான். அதற்கு அந்த தெய்வம், 'நான் இடம் அளிக்கிறேன். ஆனால் இந்தப் பகுதி மக்களை நீ காக்க வேண்டும்' என்று கூறியது. துரியோதனனும் வாக்குறுதி அளித்தான்.

அந்த வாக்கின்படி துரியோதனனுக்கு வழங்கப்பட்ட பள்ளத்தாக்கில்தான், அவனுக்கான ஆலயமும் அமைந்திருக்கிறது. மகாபாரத யுத்தத்தில் கவுரவர்கள் தோல்வியடைந்து துரியோதனன் இறந்தபோது, அவனுக்காக இப்பகுதி மக்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அந்த நீர் பெருகி, ஏரியாக உருவானது. அதன் பெயர் 'தமஸ்'. இந்த வார்த்தைக்கு 'துன்பம்' என்று பெயர். இங்கு துரியோதனன் சிலையை வைத்து வழிபடும் வழக்கம் இப்போது இல்லை. ஆனால் அங்கு சிவலிங்க வழிபாடு இருக்கிறது.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

Tags:    

மேலும் செய்திகள்