பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவு

பெரு நாட்டின் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-06-28 09:22 GMT

பெய்ஜிங்,

பெரு நாட்டின் கடற்பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 1:36 மணியளவில் (பெய்ஜிங் நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவானதாக சீனா நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் கடற்பகுதிக்கு அடியில் சுமார் 30 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்