ராட்சத பலூன்கள் மூலம் தென் கொரியாவில் குப்பைகளை வீசும் வட கொரியா

ராட்சத பலூன்கள் மூலம் தென் கொரியாவில் வட கொரியா குப்பைகளை வீசி வருகிறது.

Update: 2024-07-18 10:44 GMT

சியோல்,

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவுடன் இணைந்து போர் ஒத்திகை மேற்கொள்ளும்போது, இவ்வாறு ஏவுகணைகளை செலுத்தி தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்து வருவது வழக்கம்.

இதனிடையே சமீப காலமாக வட கொரியா ஏராளமான ராட்சத பலூன்களை தென்கொரியா எல்லைக்குள் அனுப்பி வருகிறது. அந்த பலூன்களில் குப்பைகள் கட்டி வைக்கப்பட்டுள்ளன. தென்கொரியா பகுதிகளுக்குள் இதுபோன்ற ஏராளமான குப்பைகளை கொண்ட பலூன்கள் பறந்து வந்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தென் கொரியாவின் சியோல் நகரத்திற்கு வடக்கே, வட கொரியா அனுப்பிய பலூன்கள் பறந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பலூன்களில் குப்பைகள் கட்டி வைக்கப்பட்டிருக்கலாம் என தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடகொரியாவின் இந்த செயல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக உள்ளது என்றும், இது தென்கொரிய மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்