நியூசிலாந்து: பிரபல பெண் பாடி பில்டர் 41 வயதில் மர்ம மரணம்

நியூசிலாந்தின் பெண் பாடி பில்டர் ரேச்சல் சேஸ் 41 வயதில் மர்ம மரணம் அடைந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-10-21 07:15 GMT

வெல்லிங்டன்,

நியூசிலாந்து நாட்டின் பிரபல பெண் பாடி பில்டர் ரேச்சல் சேஸ் (வயது 41). உடலை கட்டுக்கோப்பாக வைப்பது எப்படி?, அவருடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை உள்ளிட்ட பல பதிவுகளை பேஸ்புக்கில் வெளியிடுபவர்.

ஊக்கமளிக்கும் வகையிலான அவருடைய பதிவை காண்பதற்காகவே 14 லட்சம் பேர் அவரை பின்தொடருகின்றனர். இவருடைய கணவர் கிறிஸ் சேஸ். 14 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இந்த தம்பதி 2015-ம் ஆண்டில் பிரிந்தது.

இதன்பின்னர், போதை பொருள் கடத்தலுக்காக கிறிஸ் கைது செய்யப்பட்டு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். ரேச்சல் தனி ஆளாக தன்னுடைய 5 குழந்தைகளையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், திடீரென ரேச்சல் மர்ம மரணம் அடைந்தது அவருடைய நட்பு மற்றும் குடும்ப வட்டாரத்தில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இதனை அவருடைய மூத்த மகள் அன்னா சேஸ் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆனால், அவரது மரணத்திற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. இதுபற்றி நியூசிலாந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்