உக்ரைன் ராணுவ கட்டளை மையம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் ராணுவ கட்டளை மையம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

Update: 2022-03-25 19:53 GMT
Image Courtesy: AFP
கீவ்,

உக்ரைன் மீது ரஷியா இன்று 31-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்ற மும்முரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால், உக்ரைன் - ரஷிய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன.

இந்நிலையில், ராணுவ கட்டளை மையம் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. மத்திய உக்ரைனில் உள்ள வினிஸ்டியா நகரில் உள்ள ராணுவ கட்டளை மையத்தை குறிவைத்து ரஷியா இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் ராணுவ கட்டளை மையத்தின் கட்டிடம் பெரும் சேதமடைந்தது என உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்