யாகசாலை பூஜையுடன் தொடங்கியது: காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை(திங்கட்கிழமை) நடைபெறுவதையொட்டி யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்கியது.

Update: 2023-09-02 18:58 GMT

காரைக்குடி

காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை(திங்கட்கிழமை) நடைபெறுவதையொட்டி யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்கியது.

கொப்புடைய நாயகி அம்மன்

காரைக்குடியில் காவல் தெய்வமாக கொப்புடைய நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்திற்கு உட்பட்ட இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதன்படி திருப்பணிகள் நடைபெற்று வந்தது. பணிகள் முழுவதும் நிறைவு பெற்ற நிலையில் நாளை காலை கும்பாபிஷேக விழா நடக்கிறது.

முன்னதாக கடந்த 30-ந்தேதி மாலை 6 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. மறுநாள் காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு முதற்கால யாக பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நிகழ்ச்சியும், நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனைகளும், மாலையில் 3-வது கால யாகபூஜை, பூர்ணாகுதி நிகழ்ச்சியும் நடைபெற்றது

கும்பாபிஷேகம்

இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலையில் 4-வது கால யாக பூஜைகள், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையும், மாலையில் 5-வது கால யாகபூஜை, பூர்ணாகுதி நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை(திங்கட்கிழமை) காலை 6-வது கால யாகபூஜை மற்றும் பூர்ணாகுதி நிகழ்ச்சியும் காலை 9.15 மணிக்கு கடம் புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 9.30 மணி முதல் 10.15 மணிக்குள் கோவில் கோபுரங்களின் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகமும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்பாள் புறப்பாடு திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

விழாவையொட்டி பல்வேறு இடங்களில் சிறப்பு அன்னதானம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் கும்பாபிஷேக பணிகளுக்கான தூய்மை பணிகளை நகராட்சி சார்பில் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை மேற்பார்வையில் தினந்தோறும் கோவிலில் தூய்மை பணியாளர்கள் ெசய்து வருகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் இந்து சமய அறநிலையத்துறை தக்கார் மற்றும் உதவி ஆணையர் ஞானசேகரன், கோவில் செயல் அலுவலர் மகேந்திரபூபதி ஆகியோர் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்