வாகனம் மோதி தொழிலாளி பலி

சங்கரன்கோவில் அருகே வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-09-15 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 41). கூலி தொழிலாளி. இவர் கரிவலம்வந்தநல்லூரில் நேற்று மதியம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மாரிமுத்து மீது மோதியது இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும், கரிவலம்வந்தநல்லூர் போலீசார் அங்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்