வேன் மோதி தொழிலாளி பலி

பெரியகுளம் அருகே வேன் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்

Update: 2022-11-10 18:45 GMT

பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி கிராமத்தை சோ்ந்தவர் சின்னமுத்து (வயது 60). வடபுதுப்பட்டியில் உள்ள தனியார் மில்லில் தோட்ட வேலை பார்த்து வந்தார். நேற்று இவர், டி.கள்ளிப்பட்டியில் இருந்து சைக்கிளில் வடபுதுப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். மதுராபுரி விலக்கு அருகே சென்றபோது, பின்னால் வந்த வேன் ஒன்று அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்