வாகனம் மோதி தொழிலாளி சாவு

வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.

Update: 2022-09-29 19:00 GMT

ஆவூர்:

கீரனூர் அருகே உள்ள உப்பிலியகுடி ஏ.டி.கே.நகரை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவரது மகன் முருகன் (வயது 28). இவர் மாத்தூர் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற முருகன் அன்று இரவு வேலையை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் தொழிற்சாலையிலிருந்து புதுக்கோட்டை சாலையில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அண்ணா பல்கலைக்கழகம் அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் முருகன் படுகாயமடைந்தார். தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த முருகனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்