தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

பாவூர்சத்திரம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-10-08 19:00 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூர் கீழ காலனி கீழ தெருவை சேர்ந்தவர் ஆறுமுகச்சாமி (வயது 48). கூலி தொழிலாளியான இவருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவரது மனைவி தனது 2 குழந்தைகளுடன் ஆறுமுகச்சாமியைவிட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆறுமுகச்சாமியை அவரது தாயார் கண்டித்தார். இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்