கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவி அடித்துக்கொலை - கணவன் வெறிச்செயல்

வீரமணியும், தெய்வானையும் கேரளாவில் தங்கி கூலி வேலை பாா்த்து வந்துள்ளனா்.

Update: 2024-07-05 02:48 GMT

உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அ.குறும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 33), கூலித்தொழிலாளி. இவருக்கும், கடலூா் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள கோவிலானூர் கிராமத்தை சேர்ந்த பச்சமுத்து மகள் தெய்வானை (28) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவா்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா். கடந்த சில ஆண்டுகளாக வீரமணியும், தெய்வானையும் கேரளாவில் தங்கி கூலி வேலை பாா்த்து வந்துள்ளனா். அப்போது தெய்வானைக்கு, கேரளாவை சோ்ந்த ஆண் நண்பர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தொிகிறது. இதுபற்றி அறிந்த வீரமணி, தெய்வானையை பலமுறை கண்டித்துள்ளாா். இருப்பினும் அவா் அந்த நபருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவா்கள் இருவரும் சொந்த ஊரான அ.குறும்பூர் கிராமத்திற்கு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தெய்வானை கேரளாவை சோ்ந்த ஆண் நண்பருடன் செல்போனில் பேசியதாக தொிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வீரமணி, அருகில் கிடந்த கட்டையை எடுத்து தெய்வானையை சரமாாியாக தாக்கியுள்ளாா். இதில் சுருண்டு விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து வீரமணி, தனது தம்பி சதீசை (27) அழைத்து நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளாா். பின்னா் அவா்கள் இருவரும் சோ்ந்து, தெய்வானை தூக்குப்போட்டு கொண்டாா் என்று கூறி மருத்துவமனையில் சோ்த்து விடுவோம் என்று திட்டம் தீட்டினா். அதன்படி, இருவரும் தெய்வானையை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனைக்கு கொண்டு வந்து அவா் தூக்குப்போட்டு கொண்டதாக டாக்டா்களிடம் கூறினா். தொடா்ந்து தெய்வானையை பாிசோதனை செய்த டாக்டர்கள், அவா் இறந்து விட்டதாக தொிவித்தனா். மேலும் அவரது உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த டாக்டா்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தொிவித்தனா்.

அதன்பேரில், உளுந்தூா்பேட்டை போலீசாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வீரமணி மற்றும் சதீசிடம் விசாரணை நடத்தினா். அதில் வீரமணி, தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டாா். தொடா்ந்து போலீசாா் கொலை வழக்காக பதிவு செய்து வீரமணியை கைது செய்தனா். மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாக சதீசையும் போலீசாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கள்ளத்தொடா்பை கைவிட மறுத்த மனைவியை கணவன் அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்