விழுப்புரம்: ஆலத்தூரில் உள்ள பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 24 மாணவர்கள் மயக்கம்

விழுப்புரம் மாவட்டம் ஆலத்தூரில் உள்ள பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 24 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர்.

Update: 2022-09-06 10:57 GMT

மரக்காணம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலத்தூரில் அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளி மாணவர்கள் அனைவரும் பள்ளியில் சத்துணவு சாப்பிடுவது வழக்கம்.

இந்தநிலையில் இன்று வழக்கம்போல மதிய உணவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் 24 மாணவர்கள் திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் 24 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட அந்த உணவு மாதிரியை உணவு கட்டுப்பாட்டு அதிகாரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்