கொல்லிமலை சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கொல்லிமலை சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Update: 2022-06-20 18:35 GMT

சேந்தமங்கலம்:

கொல்லிமலை பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கனமழை பெய்தது. அப்போது மலைக்கு செல்லும் 61-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சாலையோரம் நின்ற ஒரு மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்