மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-08-10 18:26 GMT

நெய்தலூர் ஊராட்சி சின்னபனையூர் பகுதியில் உள்ள ஆற்று வாரிகளில் இரவு நேரங்களில் மணல் கடத்துவதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் குளித்தலை இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றுவாரியில் இருந்து வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த டிராக்டரில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 1 யூனிட் மணலுடன் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தியதாக பெரியபனையூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த செந்தில்முருகன் (வயது 43), என்பவரை போலீசார் கைது செய்து, குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்