குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

குரூப்-2 மற்றும் 2ஏ போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது

Update: 2024-07-19 01:16 GMT

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி), அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்பட பல்வேறு போட்டித்தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது. அந்த வகையில், 2024-ம் ஆண்டில், உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப்-2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப்-2ஏ பதவிகளில் ஆயிரத்து 820 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்கள் உள்ளன.

இதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி கடந்த மாதம் (ஜூன்) 20-ம் தேதி வௌியிட்டது. குரூப்-2 மற்றும் 2ஏ முதல் நிலை தேர்வுகள் வருகிற செப்டம்பர் மாதம் 14-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், குரூப்-2 மற்றும் 2ஏ போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது. விருப்பம் உள்ள பட்டதாரிகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே, விண்ணப்பித்த தேர்வர்கள், தங்களது விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வருகிற 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் தேர்வர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை திருத்தம் செய்ய முடியும். இதற்கான, காலஅவகாசம் நிறைவடைந்த பிறகு, விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றத்தையும் செய்ய அனுமதிக்கப்படாது என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்